32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
தமிழில் முன்னணி இயக்குனராக உயர்ந்த அட்லீ, கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக, ஷாருக்கான் படத்தை இயக்குவதற்காக மும்பை, சென்னை என பறந்து கொண்டிருந்தார்.
ஒரு வழியாக கடந்த ஆகஸ்ட் மாதம் புனேயில் இப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்தார்கள். படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு அவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இதனிடையே, கடந்த சில வாரங்களாக தனது மகன் ஆர்யன் கான், போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கியதைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பைத் தள்ளி வைத்தார் ஷாருக்கான். அதற்குள் படத்திலிருந்து நயன்தாரா விலகிவிட்டார் என்றும், நீக்கப்பட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், நயன்தாரா படத்திலிருந்து விலகவில்லை என்றம் அவர் படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
ஹிந்திப் படங்களைப் பொறுத்தவரையில் எந்த ஒரு தகவலையும் உறுதியாகச் சொல்ல முடியாது. அங்குள்ள ஹீரோக்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் நடக்கும். தற்போது வரை படத்திலிருந்து நயன்தாரா விலகல் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை. அதுவரையில் நயன்தாரா தான் படத்தின் கதாநாயகி.