ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

வளர்ந்து வரும் இளம் இசை அமைப்பாளர் சி.சத்யா அரண்மணை 3ம் பாகத்தின் மூலம் தனது 25வது படத்தை நிறைவு செய்துள்ளார். 2008ம் ஆண்டு ஏன் இப்படி மயக்கினாய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் வெளிவரவில்லை. அதன்பிறகு அவர் இசை அமைத்த எங்கேயும் எப்போதும் படம் அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. அந்த படத்தில் இடம்பெற்ற மாசமா... மாசமா..., உன் பேரே தெரியாது..., சொட்ட சொட்ட உள்ளிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது.
அதன்பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு, நெடுஞ்சாலை, இவன் வேற மாதிரி, காஞ்சனா 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கதை திரைக்கதை வசனம் இயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, பொன்மாலை பொழுது, ஒத்த செருப்பு, விநோதய சித்தம் உள்பட 25 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
தற்போது ஜெட்லி, ஜாஸ்மின், டீல், அலேகா, ஆயிரம் ஜென்டங்கள், ராங்கி படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். அடிப்படையில் பாடகரான சத்யா எங்கேயும் எப்போதும் படத்தில் இடம்பெற்ற மாசமா மாசமா பாடல் உள்பட ஏராளமான பாடல்களையும் பாடி உள்ளர். 25க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களுக்கும் இசை அமைத்துள்ளார்.




