ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் | பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி |
பாகுபலிக்கு இணையான தற்போது ஆர்ஆர்ஆர் படத்தையும் பிரமாண்டமாக இயக்கியிருக்கிறார் ராஜமவுலி. ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி என பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததோடு தற்போது இறுதிகட்ட பணிகளும் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.
மேலும், ஆர்ஆர்ஆர் படத்தை 2022 ஆம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியிடப் போவதாக கூறி வந்த ராஜமவுலி, அதையடுத்து வேறு தேதியில் ரிலீஸ் செய்யப்போவதாக கூறி வந்தவர் இன்னமும் உறுதியான தகவலை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் அடுத்தபடியாக மகேஷ்பாபு நடிக்கும் படத்தை பிரமாண்டமாக இயக்கப்போகிறார் ராஜமவுலி. இந்த படத்திற்கான கதையை அவரது தந்தையான விஜயேந்திர பிரசாத் ஏற்கனவே எழுதிவிட்டநிலையில் தற்போது திரைக்கதை வசனம் எழுதும் பணிகளை ராஜமவுலி தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஆப்பிரிக்காவில் நடக்கும் ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தை கே.எல்.நாராயணா புரொடக்சன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.