ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
பாகுபலிக்கு இணையான தற்போது ஆர்ஆர்ஆர் படத்தையும் பிரமாண்டமாக இயக்கியிருக்கிறார் ராஜமவுலி. ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி என பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததோடு தற்போது இறுதிகட்ட பணிகளும் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.
மேலும், ஆர்ஆர்ஆர் படத்தை 2022 ஆம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியிடப் போவதாக கூறி வந்த ராஜமவுலி, அதையடுத்து வேறு தேதியில் ரிலீஸ் செய்யப்போவதாக கூறி வந்தவர் இன்னமும் உறுதியான தகவலை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் அடுத்தபடியாக மகேஷ்பாபு நடிக்கும் படத்தை பிரமாண்டமாக இயக்கப்போகிறார் ராஜமவுலி. இந்த படத்திற்கான கதையை அவரது தந்தையான விஜயேந்திர பிரசாத் ஏற்கனவே எழுதிவிட்டநிலையில் தற்போது திரைக்கதை வசனம் எழுதும் பணிகளை ராஜமவுலி தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஆப்பிரிக்காவில் நடக்கும் ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தை கே.எல்.நாராயணா புரொடக்சன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.