என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
ஏறக்குறைய ஒரே நேரத்தில் சினிமாவில் அறிமுகமானவர்கள் தான் நடிகர் பிரித்விராஜும், நடிகை கனிகாவும்.. தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்ததாலோ என்னவோ கனிகா மலையாள நடிகையாகவே பார்க்கப்படுகிறார். ஆனாலும் இத்தனை வருடங்களில் பிரித்விராஜுடன் இணைந்து ஒரு படத்தில் கூட கனிகா நடித்தது இல்லை.
இந்தநிலையில் தற்போது மோகன்லாலை வைத்து பிரித்விராஜ் இயக்கி வரும் 'ப்ரோ டாடி' படத்தில் கனிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிரித்விராஜின் இந்த வளர்ச்சி குறித்து கனிகா கூறும்போது, “பலவிதமான கதாபாத்திரங்களில் அவர் நடித்ததை பார்த்திருக்கிறேன். பல கதாபாத்திரங்களுக்கு தனது நடிப்பால் உயிர் கொடுத்திருப்பதை பாராட்டி இருக்கிறேன்.. இதோ இப்போது முதன்முறையாக அவரது டைரக்சன் அவதாரத்தை நேரிலேயே பார்க்கும் வாய்ப்பும் மிகச்சிறந்த அனுபவமும் எனக்கு கிடைத்திருக்கிறது. நான் எப்போதுமே அவருக்கும் அவரது வேலைசெய்யும் விதத்திற்கும் ரசிகையாகவே இருந்து வருகிறேன்” என புகழ்ந்து கூறியுள்ளார்.