சூர்யாவின் ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் | எனக்கு ஒளியும் சக்தியுமாய் இருப்பது நீங்கள்தான் அப்பா : ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் : ரம்யா சுப்பிரமணியன் எச்சரிக்கை | விமர்சனங்களைத் தடுக்க முடியுமா : நானி சொல்லும் ஆலோசனை | பாதாள பைரவி : மீட்டு பாதுகாத்த இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் | ரெய்டு 2வில் இருந்து யோ யோ ஹனி சிங் பாடிய ‛மணி மணி' பாடல் வெளியீடு | ஆயிரம் கோடி வசூல் கனவு…. காத்திருக்கும் தமிழ் சினிமா…. | என்டிஆர் - நீல் படப்பிடிப்பு ஆரம்பம்: 'சலார், கேஜிஎப் 3' நடக்குமா? | 'வின்னர், கிரி' - காமெடியை மீண்டும் தருமா 'கேங்கர்ஸ்' கூட்டணி | இளையராஜா பாடலால் 'குட் பேட் அக்லி' ஹிட்டானதா?: கங்கை அமரன் பேச்சுக்கு மகன் பிரேம்ஜி சொன்னது என்ன? |
நடிகர் அஜித்துக்கு முதுகு தண்டுவடம், கால், தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் பைக் விபத்தின் போதும், சண்டை காட்சியில் நடித்தபோதும் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது முதுகு தண்டில் ஒரு எலும்பு அகற்றப்பட்டு விட்டது என்று சமீபத்தில் சண்டை இயக்குனர் கனல் கண்ணன் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அஜித் அவ்வப்போது சிறிய ஆபரேஷன்கள் செய்து கொண்டு சமாளித்து வருகிறார்.
இதேபோன்று கடந்த 21 ஆண்டுகளாக தசை நார் கிழிசலுக்கு ஆபரேஷன் செய்யாமல் வலியுடன் வாழ்ந்து வருகிறார் மம்முட்டி. கோழிகோட்டில் தனியார் மருத்துவமனை ஒன்றை திறந்து வைத்த அவர் இதுகுறித்து அங்கு பேசியதாவது:
என் இடது காலில் இருக்கும் தசைநார் கிழிந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் காலின் நீளம் குறைந்துவிடும் என்று டாக்டர்கள் கூறினார்கள். என் ஒரு காலின் நீளம் மட்டும் குறைந்தால் அது கேலி கிண்டலுக்கு ஆளாகும். அதனால் நான் அறுவை சிகிச்சை செய்யவில்லை. அவ்வப்போது வலி பிரச்சினை வரும். என்றாலும் அதை சமாளித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். என்றார்.
இந்த நிகழ்ச்சி கொரோனா விதிமுறைகளை மீறி நடத்தப்பட்டதாக விழா நடத்தியவர்கள் மீதும், கலந்து கொண்ட மம்முட்டி மற்றும் துல்கர் சல்மான் மீதும் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.