அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் |
பெரும்பாலும் முன்னணி நடிகர்களின் சண்டைக்காட்சிகளிலும் மற்றும் அவர்கள் இரண்டு வேடங்களில் நடிக்கும் படங்களிலும் அவர்களுக்கு டூப் ஆக நடிப்பதற்கு என்று சிலர் இருப்பார்கள். அவர்கள் நடிகர்களாகவோ அல்லது ஸ்டண்ட் கலைஞர்களாகவோ இருப்பது வழக்கம். ஆனால் மலையாளத்தில் மோகன்லால் தந்தை மகன் என இரண்டு வேடங்களில் நடித்த ராவண பிரபு என்கிற படத்தில் அவருக்கு டூப் ஆக நடித்தவர், ராஜன் கோயிலாண்டி என்கிற உதவி கலை இயக்குனர்.
கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக, சினிமாவில் கலை இயக்குனர் பிரிவில் பணியாற்றி வந்த ராஜன் தனக்கென எதுவும் பெரிதாக சேர்த்து வைக்கவில்லை. தற்போது கொரோனா தாக்கம் காரணமாக எந்த வேலைகளும் நடைபெறாத நிலையில், மாவூர் என்கிற பகுதியில் உள்ள பார் ஒன்றில் செக்யூரிட்டி வேலைக்கு சேர்ந்துள்ளார் ராஜன். சினிமாவில் வேலை பார்ப்பவர்களுக்கு நிரந்தரம் என எதுவும் இல்லை, அடுத்த வேளை உணவு வேண்டுமென்றால் எந்த வேலையும் பார்க்க தயங்கக்கூடாது என்பதால்தான் செக்யூரிட்டி பணியில் சேர்ந்ததாக கூறுகிறார் ராஜன்.