பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மகேஷ்பாபு தற்போது தெலுங்கில் நடித்து வரும் படம் 'சர்க்காரு வாரி பாட்டா'. இயக்குனர் பரசுராம் இயக்கிவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்புவரை நடைபெற்று வந்தது. ஒருபக்கம் கொரோனா பரவல் அதிகரிக்க, இன்னொரு பக்கம் படக்குழுவினரில் சிலரும் மகேஷ்பாபுவின் பெர்சனல் ஒப்பனை கலைஞரும் கூட கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். இதனை தொடர்ந்து படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் அந்தப்படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்த, 39 வயதே ஆன குமார் வட்டி என்பவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இன்று மரணத்தை தழுவியுள்ளார். இது மகேஷ்பாபு படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குனர் பரசுராமிடம் பல படங்களில் உதவியாளராக பணியாற்றிய குமார் வட்டி, கடந்த 2017ல் 'மா அப்பாயி' என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். தற்போது தனது குருநாதர் பரசுராம் இயக்கிவரும் மகேஷ்பாபுவின் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில், கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை எடுத்து வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார் குமார் வட்டி