ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் | சினிமாவில் 20 ஆண்டுகள்: பயணம் முடியவில்லை என்கிறார் ரெஜினா |
சில மாதங்களுக்கு முன்பு மலையாள நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகை ஸ்வேதா மேனன் முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த வருடங்களில் மலையாள திரையுலகில் தொடர்ந்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் பெண்களுக்கான பாலியல் ரீதியான அத்துமீறல்கள் குறித்த பிரச்சனைகளை முக்கிய கவனத்தில் கொண்டு செயல்பட போவதாக கூறி இருந்தார் ஸ்வேதா மேனன்.
2018ல் திரையுலகில் பெண்களுக்கான பிரச்சனைகள் குறித்து விசாரிப்பதற்காக கேரளா அரசால் நீதிபதி ஹேமா கமிஷன் அமைக்கப்பட்ட போது இந்த பிரச்சனை தொடர்பாக நடிகைகள் பலர் ஒரு ஹோட்டலில் ஒரு கூட்டம் நடத்தி, அதில் தாங்கள் சந்தித்த பிரச்சனைகள் குறித்து பேசி விவாதித்தனர். அந்த நிகழ்வு முழுவதும் ஒரு வீடியோவாக எடுக்கப்பட்டது. ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த மெமரி கார்டு தொலைந்து விட்டது என அப்போது இருந்த நிர்வாகிகள் அலட்சியமாக தெரிவித்தனர். இந்த நிலையில் தான் ஸ்வேதா மேனன் தலைமை பொறுப்புக்கு வந்ததும் அந்த மெமரி கார்டை தேடிக் கண்டுபிடிப்பதற்காக சிறப்பு குழு ஒன்றை நியமிப்பதாக அறிவித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்காக ஐந்து பேர் கொண்ட குழுவை அவர் அறிவித்துள்ளார். இந்த குழுவில் அவரும் ஒருவராக பங்கேற்றுள்ளதுடன் இந்த தேர்தலில் தன்னை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாட்ஷா வில்லன் நடிகரான தேவனையும் தன்னுடன் உதவிக்கு சேர்த்துக் கொண்டுள்ளார் என்பது தான் ஆச்சரியமான விஷயம். அது மட்டுமல்ல இந்த பாலியல் அத்துமீறல் குறித்து பிரச்னை கிளப்பிய நடிகைகள் அனைவருக்குமே நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவர்களிடம் ரகசிய விசாரணையை செய்யவும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதத்திற்குள் இது குறித்த அறிக்கை நடிகர் சங்கத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் ஸ்வேதா மேனன் அறிவித்துள்ளார்.