நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாள திரையுலகில் கடந்த வருடம் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக மலையாள நடிகர் சங்கத்திற்குள் பல குழப்பங்கள் ஏற்பட்டன. நடிகர் சங்க நிர்வாகிகள் பலர் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகினர். இதனைத் தொடர்ந்து இதற்கு தார்மீக பொறுப்பேற்று நடிகர் மோகன்லால் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சங்கத்திற்கான புதிய தேர்தல் நடைபெற்று முதல் பெண் தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெண் ஒருவர் தலைவராக வந்துள்ளதால் நடிகைகள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு வரும் என அனைவரும் நம்புகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் மோகன்லால் இருந்த இடத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள், அதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்டபோது ‛‛உண்மையிலேயே எனக்கு ஹேமா கமிஷன் அறிக்கை கொடுத்த அதிர்ச்சியை விட லாலேட்டன் (மோகன்லால்) ராஜினாமா செய்து விட்டு சென்றது தான் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது'' என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, “மோகன்லால் நல்ல தலைமை பண்பு கொண்டவர். அவரின் கீழ் நான் பணியாற்றி இருக்கிறேன். தோல்வியை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளும் நபர் அவர் அல்ல. அவர் கார்னர் செய்யப்பட்டோ அல்லது தனிமைப்படுத்தப்பட்டோ தான் இப்படி ஒரு முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என்பது தான் உண்மை. அதனால் ராஜினாமா என்பது அவராக எடுத்த இயல்பான முடிவு அல்ல” என்று கூறி இருக்கிறார் ஸ்வேதா மேனன்.