சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
கடந்த 2019-ல் நடிகர் பிரித்விராஜ் இயக்குனராக மாறி மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற படத்தை இயக்கினார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு பிறகு தற்போது எம்புரான் என்கிற பெயரில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்கள். படம் ஓரளவு நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் தேவையில்லாத மத சர்ச்சைகளில் சிக்கியதுடன் இன்னொரு பக்கம் முதல் பாகம் போல இல்லையே என்கிற விமர்சனங்களையும் பெற்றது.
இந்த படத்திற்கு மூன்றாம் பாகமும் இருக்கிறது என்கிற தகவலை கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது புரமோஷன் நிகழ்ச்சியில் கூறி இருந்தார் பிரித்விராஜ். இரண்டாம் பாகத்தின் வெற்றியைப் பொறுத்தே மூன்றாம் பாகம் எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த மூன்றாம் பாகத்திற்கு அஸ்ரேல் என டைட்டில் வைக்கப்படலாம் என இந்த படத்தின் இசையமைப்பாளரான தீபக் தேவ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எம்புரான் படத்தின் கிளைமாக்ஸில் உஷா உதூப் குரலில் இடம் பெற்ற பாடலில் இந்த அஸ்ரேல் என்கிற வார்த்தை இடம் பிடித்துள்ளதை சுட்டிக்காட்டி மூன்றாம் பாகத்திற்கு இது பொருத்தமான டைட்டிலாக இருக்க வாய்ப்பு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.