யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019ல் மோகன்லால் நடிப்பில் வெளியாகிய வெற்றியை பெற்ற படம் லூசிபர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எம்புரான் என்கிற பெயரில் தயாராகியுள்ளது. வரும் மார்ச் 27ல் திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், பிரித்விராஜ், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் என முக்கிய நட்சத்திரங்கள் இதிலும் தொடர்கின்றனர். இவர்களோடு முதல் பாகத்தில் ஒரு டிவி சேனல் சிஇஓ கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நைலா உஷாவும் அதே கதாபாத்திரத்தில் தொடர்கிறார். இவரது கதாபாத்திர போஸ்டரை நடிகர் மோகன் வெளியிட்டார்.
இந்த படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நைலா உஷா கூறும்போது, “முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்தில் இன்னும் கூடுதலாக சில மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் ஒரு டிவி நிர்வாகத்தின் சிஇஓ ஆக இருந்தேன். இப்போது ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. அரசியல் படம் என்பதால் இத்தனை வருடங்களில் அரசியலும் மாறிவிட்டது. அதேபோல என்னுடைய கதாபாத்திரத்தின் மனநிலையும் மாறி இருக்கும் இல்லையா? அதற்கு ஏற்றபடி எனது கதாபாத்திரம் எம்புரானில் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.