துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019ல் மோகன்லால் நடிப்பில் வெளியாகிய வெற்றியை பெற்ற படம் லூசிபர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எம்புரான் என்கிற பெயரில் தயாராகியுள்ளது. வரும் மார்ச் 27ல் திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், பிரித்விராஜ், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் என முக்கிய நட்சத்திரங்கள் இதிலும் தொடர்கின்றனர். இவர்களோடு முதல் பாகத்தில் ஒரு டிவி சேனல் சிஇஓ கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நைலா உஷாவும் அதே கதாபாத்திரத்தில் தொடர்கிறார். இவரது கதாபாத்திர போஸ்டரை நடிகர் மோகன் வெளியிட்டார்.
இந்த படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நைலா உஷா கூறும்போது, “முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்தில் இன்னும் கூடுதலாக சில மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் ஒரு டிவி நிர்வாகத்தின் சிஇஓ ஆக இருந்தேன். இப்போது ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. அரசியல் படம் என்பதால் இத்தனை வருடங்களில் அரசியலும் மாறிவிட்டது. அதேபோல என்னுடைய கதாபாத்திரத்தின் மனநிலையும் மாறி இருக்கும் இல்லையா? அதற்கு ஏற்றபடி எனது கதாபாத்திரம் எம்புரானில் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.