பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019ல் மோகன்லால் நடிப்பில் வெளியாகிய வெற்றியை பெற்ற படம் லூசிபர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எம்புரான் என்கிற பெயரில் தயாராகியுள்ளது. வரும் மார்ச் 27ல் திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், பிரித்விராஜ், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் என முக்கிய நட்சத்திரங்கள் இதிலும் தொடர்கின்றனர். இவர்களோடு முதல் பாகத்தில் ஒரு டிவி சேனல் சிஇஓ கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நைலா உஷாவும் அதே கதாபாத்திரத்தில் தொடர்கிறார். இவரது கதாபாத்திர போஸ்டரை நடிகர் மோகன் வெளியிட்டார்.
இந்த படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நைலா உஷா கூறும்போது, “முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்தில் இன்னும் கூடுதலாக சில மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் ஒரு டிவி நிர்வாகத்தின் சிஇஓ ஆக இருந்தேன். இப்போது ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. அரசியல் படம் என்பதால் இத்தனை வருடங்களில் அரசியலும் மாறிவிட்டது. அதேபோல என்னுடைய கதாபாத்திரத்தின் மனநிலையும் மாறி இருக்கும் இல்லையா? அதற்கு ஏற்றபடி எனது கதாபாத்திரம் எம்புரானில் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.