கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் |

கடந்த சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக ஜனவரி 14ம் தேதி தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் 'சங்கராந்திகி வஸ்துனம்' என்கிற படம் வெளியானது. ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்த இந்த படத்தை அனில் ரவிபுடி இயக்கியிருந்தார். குடும்பங்கள் ரசிக்கும் விதமாக கலகலப்பான படமாக வெளியான இந்த படம் 300 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிப்படமாக மாறியது.
குறிப்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'கேம் சேஞ்ஜர்' திரைப்படம் சரியாக போகாத நிலையிலும் புஷ்பா 2 திரைப்படம் ஓரளவுக்கு ஓடி முடிந்த நிலையிலும் இருந்ததால் இந்த படத்திற்கு போட்டியின்றி நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய நாயகன் வெங்கடேஷ், இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என்கிற அறிவிப்பை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறும்போது, “மீண்டும் சங்கராந்திகி வஸ்துனம் படத்தில் நிகழ்ந்ததை போன்ற அதே மேஜிக்கை இதன் இரண்டாம் பாகத்தில் நிகழ்த்துவேன்.. வரும் 2027 சங்கராந்தி பண்டிகை வெளியீடாக அந்த படம் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.