கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தமிழில் திருடி, வீரமும் ஈரமும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் தன்யா. மலையாளத்தில் தன்யா மேரி வர்கீஸ் என்ற பெயரில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். ஜான் ஜேக்கப் என்பரை 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
கணவர் ஜான் ஜேக்கப்பும், தன்யாவும் இணைந்து கட்டுமான நிறுவனம், நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்கள். இவர்களின் நிறுவனத்தின் மீது மோசடி புகார்கள் கூறப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தருவதாகவும், கூடுதல் வட்டி தருவதாகவும் கூறி பலரை ஏமாற்றி 100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக கேரள போலீஸ், நடிகை தன்யா அவரது கணவர் ஜான் ஜேக்கப் மற்றும் அவரது நண்பர்கள் சிலரை செய்ததுது. பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆனார்கள். வழக்கு நடந்து வருகிறது.
இதற்கிடையில் அவர்கள் மீது அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது. நடிகை தன்யாவுககு சொந்தமான திருவனந்தபுரத்தில் உள்ள ரூ.1.56 கோடி மதிப்புள்ள சொத்து உள்பட அவர் பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.