காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
கன்னட திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் ரக்ஷித் ஷெட்டி. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக அறிமுகமான கிரிக் பார்ட்டி படத்தில் ஹீரோவாக நடித்ததுடன் ராஷ்மிகாவுக்கும் இவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் வரை சென்று நின்று போனதால் தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகராக மாறினார். அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சார்லி 777 மற்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான பேச்சுலர் பார்ட்டி உள்ளிட்ட படங்கள் மூலம் முன்னணி நடிகராக மாறி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இவரது நடிப்பில் பேச்சுலர் பார்ட்டி என்கிற படம் வெளியானது.
இந்தப் படத்தை இவரே தயாரித்தும் இருந்தார். அர்ஜூன் ராமு என்பவர் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ஏற்கனவே வெளியான நியாய எல்லிடே மற்றும் காலிமாத்து ஆகிய படங்களில் இடம் பெற்ற பாடல்களை தங்களது அனுமதி இல்லாமல் இந்த படத்தில் பயன்படுத்தி இருப்பதாக எம்ஆர்பி மியூசிக் என்கிற நிறுவனம் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்தநிலையில் சமீபத்தில் நடைபெற்ற விசாரணையில் நடிகர் ரக்ஷித் ஷெட்டி நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனை தொடர்ந்து எம்ஆர்பி மியூசிக் நிறுவனத்தின் அனுமதியின்றி அவர்களது பாடல்களை ரக்ஷித் ஷெட்டி பயன்படுத்தியதை விசாரணையில் உறுதி செய்த நீதிமன்றம் அதற்கான இழப்பீட்டு தொகையாக இருபது லட்சம் ரூபாயை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது. மேலும் கடந்த ஜூலை 15ம் தேதி, இந்த பிரச்சனை குறித்து ஆ சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்த பதிவில் சில நொடிகள் இசையை பயன்படுத்தியதற்காக எம்ஆர்பி மியூசிக் நிறுவனம் அதிகபட்ச தொகை கேட்பதாக விமர்சித்திருந்தார். அந்த பதிவையும் அவர் நீக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.