மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா | மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? | ஏஆர் முருகதாஸை வறுத்தெடுத்த சல்மான் கான் |
கன்னட திரையுலகில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக அறியப்படுபவர் ரக்சித் ஷெட்டி. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு நாய்க்கும் மனிதனுக்குமான அன்பை மையப்படுத்தி வெளியான ‛சார்லி 777' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் அறிமுகமானவர். இன்னும் சொல்லப்போனால் நடிகை ராஷ்மிகாவுக்கும் இவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் வரை சென்று கடைசி நேரத்தில் நின்று போனது சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும் தற்போது படங்களை கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இவரது நடிப்பில் ‛பேச்சுலர் பார்ட்டி' என்கிற படம் வெளியானது. இந்தப் படத்தை இவரே தயாரித்தும் இருந்தார். அர்ஜுன் ராமு என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ஏற்கனவே வெளியான நியாய எல்லிடே மற்றும் காலிமாத்து ஆகிய படங்களில் இடம் பெற்ற பாடல்களை தங்களது அனுமதி இல்லாமல் இந்த படத்தில் பயன்படுத்தி இருப்பதாக எம்ஆர்பி மியூசிக் என்கிற நிறுவனம் புகார் அளித்திருந்தது. இதைத்தொடர்ந்து காப்பிரைட் உரிமை சட்டத்தின்படி பெங்களூரு போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.