‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் மஞ்சும்மேல் பாய்ஸ். இந்த படத்தை சிதம்பரம் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரபல நகைச்சுவை நடிகர் சவ்பின் ஷாஹிர் இந்த படத்தின் தயாரிப்பாளராகவும் மாறி தனது சகோதரர் பாபு ஷாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி ஆகியோருடன் இணைந்து தயாரித்திருந்தார். சுமார் 20 கோடி பட்ஜெட்டில் வெளியான இந்த படம் 220 கோடி வசூலித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த சிராஜ் வளையதாரா என்கிற பைனான்சியர் இந்த படத்தின் தயாரிப்பு செலவுகளுக்காக தான் 7 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாகவும், படம் வெளியான பிறகு வரும் மொத்த லாபத்தில் 40 சதவீத பங்கு தனக்கு தருவதாகவும் கூறிய மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் தனக்கு பணம் தராமல் மோசடி செய்வதாகவும் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் போலீசார் மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இன்னொரு பக்கம் இதன் மூலம் பண மோசடி நடந்திருக்கலாம் என அமலாக்கத் துறையும் இவர்கள் மீது தனது விசாரணையை ஆரம்பித்தது. இது குறித்து விளக்கம் பெறுவதற்காக நேரில் ஆஜராகுமாறு மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பியது.
அதை அவர்கள் பொருட்படுத்தாத நிலையில் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தாங்கள் பணம் வாங்கிய நபருக்கு உரிய முறையில் பங்குத் தொகையை பிரித்தளிக்காமல் பேராசையின் காரணமாக தேவையில்லாத சிக்கலில் மஞ்சும்மேல் வாய்ஸ் தயாரிப்பாளர்கள் மாட்டிக்கொண்டதாகவே திரையுலகத்தினரும் ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.