அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் |

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் பவன் கல்யாண் இன்னொரு பக்கம் ஜனசேனா என்கிற அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். தற்போது 2024 பார்லிமென்ட் தேர்தல் ஆறுகட்டங்களாக நடைபெறும் நிலையில் ஆந்திராவிற்கான சட்டசபை தேர்தலும் மே 13 இல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள பீதாப்புரம் என்கிற சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார் பவன் கல்யாண்.
இதற்காக சமீபத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள பவன் கல்யாண் அப்போது தன்னிடம் 164.53 கோடி சொத்துக்கள் உள்ளதாக அபிடவிட் தாக்கல் செய்துள்ளார். இதில் 118.3 6 கோடி அசையா சொத்துக்களாகவும் 46.17 கோடி அசையும் சொத்துக்களாகவும் இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் 14 கோடி மதிப்பிலான 11 விலை உயர்ந்த கார்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.