கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
மலையாளத்தில் மம்முட்டியை வைத்து போக்கிரி ராஜா மற்றும் மதுர ராஜா என இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் வைசாக் தற்போது அவரை வைத்து மூன்றாவது முறையாக டர்போ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இவர் தான் மோகன்லாலை வைத்து புலிமுருகன் என்கிற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தவர். புலிமுருகன் படத்தில் மோகன்லாலின் ஆக்ஷன் காட்சிகள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன. அதேபோன்று தற்போது டர்போ படத்திலும் ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படமாக்கி வருகிறார் வைசாக்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் மம்முட்டியிடம் தான் நடந்து கொண்ட விதம் குறித்து மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார் இயக்குனர் வைசாக். இது குறித்து அவர் கூறும்போது, “சாரி மம்மூக்கா(மம்முட்டி).. நீங்கள் என்னிடம் பலமுறை கேட்டுக் கொண்டும் கூட நான் உங்கள் வயதை (72) மறந்து விட்டேன். அப்போது மற்றவர்களிடம் சொல்லும்போது கூட மம்மூக்காவிற்கு 45 முதல் 50 வயது மட்டுமே ஆனதாக எனக்கு தோன்றுகிறது என்று கூறி இருக்கிறேன்.
அது மட்டுமல்ல மம்முட்டியின் கண்கள் தான் இந்த படத்தில் அவரது வயதை தீர்மானிக்கின்றன. படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வயதாகவே அவரை நினைத்து மிகப்பெரிய சவாலான ஆக்ஷன் காட்சிகளில் அவரை நடிக்க வைத்திருக்கிறேன். சில நேரங்களில் விடியற்காலை மூன்று, நான்கு மணிக்கெல்லாம் படப்பிடிப்பு நடத்தி அவருக்கு சிரமம் கொடுத்துள்ளேன். இந்த படத்தில் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை மம்மூக்கா தான்” என்று கூறியுள்ளார்.