சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

சமீபத்தில் நடிகர் சிரஞ்சீவிக்கு மத்திய அரசு பத்ம விபூஷண் விருது அறிவித்தது. இதனை தொடர்ந்து தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை நேரிலும் சோசியல் மீடியா மூலமாகவும் சிரஞ்சீவிக்கு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரும் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தை தயாரித்தவருமான தில் ராஜு, சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதை பிரம்மாண்ட விழாவாக கொண்டாட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் படங்களின் ரிலீஸ் தேதியை ஒழுங்குபடுத்துவது குறித்து உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார் தில் ராஜு. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, பத்ம விபூஷண் பட்டம் பெற்ற சிரஞ்சீவியை கவுரவிக்கும் விதமாக பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்த தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.