தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் |
மலையாள நடிகர் திலீப் தற்பொழுது ‛தங்கமணி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். பல விருதுகளைப் பெற்ற 'உடல்' என்கிற படத்தை இயக்கிய ரதீஷ் ரகுநந்தன் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். நடிகை பிரணிதா சுபாஷ் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தங்கமணி என்கிற கிராமத்தைப் பற்றியும் அந்த ஊரில் பல வருடங்களுக்கு முன்பு போலீஸ் ஸ்டேஷனில் நடைபெற்ற, அதேசமயம் அவ்வளவாக வெளியே தெரியாமல் போன ஒரு பாலியல் பலாத்கார கொலை மற்றும் அதன் பின்னணி பற்றியும் தான் இந்த படத்தின் மையக் கருவாக சொல்லப்படுகிறதாம்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியானபோது இதுகுறித்த சில காட்சிகளும் அதில் இடம்பெற்று இருந்தன. இந்த நிலையில் தங்கமணி கிராமத்தைச் சேர்ந்த வி.ஆர்.பைஜூ என்பவர் தங்களது கிராமத்தைப் பற்றிய ஒரு தவறான கண்ணோட்டத்தை உருவாக்கும் விதமாக இந்த படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்றும் அவற்றை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்து உள்ளார். மேலும் இந்த படம் வெளியானால் தங்களது கிராமத்தையே மற்ற நகரங்களில் இருந்து மக்கள் வேறுபடுத்தி பார்க்கும் கண்ணோட்டத்தையும் ஏற்படுத்தி விடும் அபாயம் இருக்கிறது என்றும் அதில் கூறியுள்ளார்.