என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

மலையாள நடிகர் திலீப் தற்பொழுது ‛தங்கமணி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். பல விருதுகளைப் பெற்ற 'உடல்' என்கிற படத்தை இயக்கிய ரதீஷ் ரகுநந்தன் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். நடிகை பிரணிதா சுபாஷ் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தங்கமணி என்கிற கிராமத்தைப் பற்றியும் அந்த ஊரில் பல வருடங்களுக்கு முன்பு போலீஸ் ஸ்டேஷனில் நடைபெற்ற, அதேசமயம் அவ்வளவாக வெளியே தெரியாமல் போன ஒரு பாலியல் பலாத்கார கொலை மற்றும் அதன் பின்னணி பற்றியும் தான் இந்த படத்தின் மையக் கருவாக சொல்லப்படுகிறதாம்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியானபோது இதுகுறித்த சில காட்சிகளும் அதில் இடம்பெற்று இருந்தன. இந்த நிலையில் தங்கமணி கிராமத்தைச் சேர்ந்த வி.ஆர்.பைஜூ என்பவர் தங்களது கிராமத்தைப் பற்றிய ஒரு தவறான கண்ணோட்டத்தை உருவாக்கும் விதமாக இந்த படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்றும் அவற்றை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்து உள்ளார். மேலும் இந்த படம் வெளியானால் தங்களது கிராமத்தையே மற்ற நகரங்களில் இருந்து மக்கள் வேறுபடுத்தி பார்க்கும் கண்ணோட்டத்தையும் ஏற்படுத்தி விடும் அபாயம் இருக்கிறது என்றும் அதில் கூறியுள்ளார்.