தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் |

தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபாஸ், ஜூனியர் என்டிஆர், ராம்சரண், நானி உள்ளிட்ட பல இளம் நடிகர்கள் பிரபல இயக்குனர் ராஜமவுலியின் டைரக்சனின் நடித்து விட்டனர். ஆனால் உச்சத்தில் இருக்கும் நடிகர் மகேஷ்பாபு இதுவரை ராஜமவுலி டைரக்சனின் நடிக்காதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய குறையாக இருந்தது. இந்த நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை ராஜமவுலி இயக்குகிறார் என்பது கடந்த வருடமே அறிவிக்கப்பட்டு விட்டது.
தற்போது இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிவடைந்து விட்டதாக ராஜமவுலியின் தந்தையும் அவரது படங்களின் கதை இலாக்காவில் முக்கிய பங்கு வகிப்பவருமான விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார் இந்த படத்தின் சில தொழில்நுட்ப பணிகளை மேற்கொள்வதற்காக நடிகர் மகேஷ்பாபு தற்போது தனியாக சென்று ஜெர்மனிக்கு பயணம் கிளம்பி சென்றுள்ளதும் அதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.