வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
நடிகை பார்வதி தென்னிந்திய மொழிகளையும் தாண்டி பாலிவுட் வரை புகழ்பெற்ற நடிகையாக மாறிவிட்டார். பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றெல்லாம் பார்க்காமல் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் அவர் தெலுங்கில் நடித்த தூதா மற்றும் ஹிந்தியில் நடித்துள்ள கடக் சிங் என இரண்டு வெப் சீரிஸ்கள் அடுத்தடுத்து வெளியாகி உள்ளன. அடுத்ததாக துல்கர் சல்மான் தயாரிக்கும் படம் ஒன்றில் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் பார்வதி நடிக்கிறார் என்ற செய்தி ஒன்று சோசியல் மீடியாவில் வெளியானது.
ஆனால் இந்த தகவலை பார்த்ததும் உடனடியாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் பார்வதி. இது குறித்து அவர் கூறும்போது, “எந்த ஒரு சூப்பர் ஹீரோ படத்திலும் நடிப்பதற்கு நான் இதுவரை ஒப்பந்தமாகவில்லை. யாராலோ என்ன காரணத்தினாலோ தவறான செய்தி பரப்பப்படுகிறது. ஓகே குட் பை” என்று கூறியுள்ளார்.