ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
பிரபல பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் தென்னிந்திய மொழி திரைப்படங்கள் மீது தனிப்பிரியம் கொண்டவர். தமிழில் நல்ல படங்கள் வரும்போது தனது பாராட்டுகளை தவறாமல் தெரிவித்து வருபவர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த இமைக்கா நொடிகள் என்கிற படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான லியோ திரைப்படத்தில் ஒரு நிமிடமே வந்து போகும் காட்சியில் நடித்திருந்தார். அதையடுத்து தற்போது சுந்தர்.சியுடன் 'ஒன் டூ ஒன்' என்கிற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அடுத்ததாக மலையாள திரையுலகிலும் அடி எடுத்து வைக்கிறார் அனுராக் காஷ்யப். கடந்த சில நாட்களாக கேரளாவில் நடைபெற்று வரும் கேரள சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று வரும் அனுராக் காஷ்யப் கேரளா மீடியாக்களிடம் பேசும்போது, “நான் மலையாள படம் ஒன்று நடிக்க இருக்கிறேன். வரும் ஜனவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. படத்தின் இயக்குனரிடம் நான் என்ன கதாபாத்திரம் செய்கிறேன் என்றெல்லாம் கேட்கவில்லை. ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.