'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் | ஜெயிலரின் வில்லனாக நடிக்க இருந்தது மம்முட்டி தான் ; ரகசியம் உடைத்த வசந்த் ரவி |
மலையாளத்தில் கடந்த மே மாதம் பைனரி என்கிற படம் வெளியானது. இந்த படத்தை இயக்குநர் ஜாசிக் அலி என்பவர் இயக்கியிருந்தார். இதில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக கூறி மைனர் பெண் ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றார் என்றும், தொடர்ந்து பலமுறை ஏமாற்றி பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்துள்ளார் என்றும் இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சில நாட்களாகவே தலைமறைவாக இருந்த ஜாசிப் அலியை கோயிலாண்டி போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கேரளாவில் நடக்காவு என்கிற பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ஜாசிக் அலியை போலீசார் கைது செய்தனர்.