போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் போலா சங்கர் என்கிற படம் வெளியானது. அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த இந்த படத்தில் தமன்னா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். மெஹர் ரமேஷ் இயக்கியிருந்தார் இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறி வசூல் ரீதியாக சரிவையும் சந்தித்தது. அதே நேரத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெற்றிகரமான வரவேற்பை பெற்றதால் போலா சங்கர் படம் பெரும் பின்னடைவை சந்தித்தது.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக தனக்கு பேசப்பட்ட 65 கோடி ரூபாய் சம்பளத்தை செட்டில் செய்யும்படி சிரஞ்சீவி கறாராக தயாரிப்பாளர் அனில் சுங்கராவிடம் பிடிவாதம் காட்டினார் என்றும், இதற்காக தனது சொத்து ஒன்றை பிணையாக வைத்து சிரஞ்சீயின் சம்பளத்தை தயாரிப்பாளர் அனில் சுங்கரா செட்டில் செய்தார் என்றும் ஒரு செய்தி கடந்த இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக தனது சோசியல் மீடியா மூலமாக பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் அனில் சுங்கரா கூறும்போது, “தற்போது ஆன்லைனில் இந்த படம் தொடர்பாக சுற்றி வரும் வதந்திகள் ஆதாரமற்றவை. அதில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை” என்று மறுத்துள்ளார்.