‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக நடித்து வருபவர் உன்னி முகுந்தன். தமிழில் தனுஷ் நடித்த சீடன் மற்றும் அனுஷ்காவின் பாகமதி, சமந்தாவின் யசோதா உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்திலும் உன்னி முகுந்தன் நடித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் தயாரிப்பாளராக மாறி இவர் தயாரித்த மேப்படியான் மற்றும் மாளிகைப்புரம் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் கோடிகளில் வசூலையும் குவித்தன. சமீபத்தில் கூட கேரளாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
அதே சமயம் கடந்த 2018ல் உன்னி முகுந்தன் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்தார். தான் அடுத்ததாக எடுக்க இருக்கும் படத்தின் கதை விவாதம் குறித்து பேசுவதற்காக ரிசார்ட் ஒன்றுக்கு தன்னை அழைத்த உன்னி முகுந்தன் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார் என்று அந்தப் பெண் குற்றச்சாட்டில் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து உன்னி முகுந்தன் மீது வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் தன்னிடம் இருந்து பணம் பறிப்பதற்காகவே சம்பந்தப்பட்ட அந்த பெண் இப்படி தவறாக புகார் அளித்திருக்கிறார் என்றும் இந்த வழக்கை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்றும் கூறி உயர்நீதிமன்றத்தில் உன்னி முகுந்தன் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் புகார் அளித்த சம்பந்தப்பட்ட பெண் இந்த வழக்கிலிருந்து பின்வாங்க மறுத்து விட்டதால் இந்த வழக்கு விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கம் போல தொடரும் என்று கூறி உன்னி முகுந்தனின் மனுவை நிராகரித்து விட்டது.