'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா |
மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக நடித்து வருபவர் உன்னி முகுந்தன். தமிழில் தனுஷ் நடித்த சீடன் மற்றும் அனுஷ்காவின் பாகமதி, சமந்தாவின் யசோதா உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்திலும் உன்னி முகுந்தன் நடித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் தயாரிப்பாளராக மாறி இவர் தயாரித்த மேப்படியான் மற்றும் மாளிகைப்புரம் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் கோடிகளில் வசூலையும் குவித்தன. சமீபத்தில் கூட கேரளாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
அதே சமயம் கடந்த 2018ல் உன்னி முகுந்தன் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்தார். தான் அடுத்ததாக எடுக்க இருக்கும் படத்தின் கதை விவாதம் குறித்து பேசுவதற்காக ரிசார்ட் ஒன்றுக்கு தன்னை அழைத்த உன்னி முகுந்தன் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார் என்று அந்தப் பெண் குற்றச்சாட்டில் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து உன்னி முகுந்தன் மீது வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் தன்னிடம் இருந்து பணம் பறிப்பதற்காகவே சம்பந்தப்பட்ட அந்த பெண் இப்படி தவறாக புகார் அளித்திருக்கிறார் என்றும் இந்த வழக்கை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்றும் கூறி உயர்நீதிமன்றத்தில் உன்னி முகுந்தன் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் புகார் அளித்த சம்பந்தப்பட்ட பெண் இந்த வழக்கிலிருந்து பின்வாங்க மறுத்து விட்டதால் இந்த வழக்கு விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கம் போல தொடரும் என்று கூறி உன்னி முகுந்தனின் மனுவை நிராகரித்து விட்டது.