நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! |

மலையாள திரையுலகில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு 50 கோடி வசூல் என்பதே கனவாக இருந்தது, திரிஷ்யம் படம் மூலம் முதல் 50 கோடி வசூலும், புலி முருகன் படம் மூலம் முதல் 100 கோடி வசூலும், லூசிபர் மூலம் முதல் 200 கோடி வசூல் என கடந்த பத்து வருடங்களில் மலையாள சினிமா தனது வியாபார எல்லையை விரிவு படுத்தியுள்ளது. இருப்பினும் மலையாள திரையுலகில் 100 கோடி வசூல் இலக்கு என்பது இப்போதும் பலருக்கு எட்டாக்கனியாக தான் இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் 2018 என்கிற படம் வெளியானது. இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர் இயக்கிய இந்த படத்தில் டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிப் அலி, நரேன், வினீத் சீனிவாசன் உள்ளிட்ட பல இளம் நடிகர்கள் நடித்திருந்தனர். கேரளாவில் கடந்த 2018ல் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ள பாதிப்பை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. அதனாலோ என்னவோ இந்த படத்திற்கு கடந்த 10 நாட்களாகவே தொடர்ந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் இந்த 10 நாட்களிலேயே 100 கோடி வசூல் என்கிற மாபெரும் இலக்கை எளிதாக தொட்டுள்ளது இந்த படம். குறிப்பாக கேரளாவில் மட்டும் 44 கோடி வசூலித்துள்ளது. இதற்கு முன்பு மோகன்லால், பிரித்விராஜ், திலீப், துல்கர் சல்மான் என முன்னணி ஹீரோக்களின் படங்கள் இதேபோன்று 100 கோடி இலக்கை அடைந்திருந்தாலும் அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள ஹீரோக்கள் இணைந்து நடித்த ஒரு படம் தற்போது இந்த இலக்கை தொட்டிருப்பது மலையாள திரையுலகை உற்சாகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பாக மோகன்லாலின் லூசிபர் திரைப்படம் எட்டு நாட்களில் 100 கோடி வசூலித்து இருந்தது. அதற்கு அடுத்த இடத்தை இந்த 2018 திரைப்படம் பிடித்துள்ளது.




