புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கன்னட திரை உலகில் அதிரடியான படங்களை இயக்குவதற்கும் அதிரடி நடிப்பிற்கும் பெயர் போனவர் உபேந்திரா. இவரும் கிச்சா சுதீப்பும் இணைந்து நடித்துள்ள படம் கப்ஜா. இந்த படத்தை சந்துரு என்பவர் இயக்கியுள்ளார். பான் இந்தியா படமாக வரும் மார்ச் 17ல் இந்த படம் வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் பெங்களூரு, சென்னை, தற்போது ஐதராபாத் என சீரான இடைவெளியில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்ற கப்ஜா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் உபேந்திரா கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அவர் பேசும்போது மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் பற்றி குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “புனித் தனது படத்தை இயக்குமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். அந்த சமயத்தில் நான் பிஸியாக இருந்ததால் அவரது படத்தை இயக்க முடியவில்லை. ஆனால் கடைசிவரை எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமலேயே அவர் சென்று விட்டார். இருந்தாலும் அவரிடம் மிஸ் பண்ணிய அந்த வாய்ப்பை ஈடு செய்யும் விதமாக அண்ணன் சிவராஜ்குமாரை வைத்து நிச்சயமாக நான் ஒரு படம் இயக்குவேன்” என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார் உபேந்திரா.
இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் பவன் கல்யாணுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் தனது ஜனசேனா கட்சியின் கூட்டங்கள் சிலவற்றில் தொடர்ந்து கலந்துகொள்ள வேண்டி இருந்ததால் இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று கடிதம் மூலம் தனது வருத்தத்தை தெரிவித்துள்ள பவன் கல்யாண், உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் உள்ளிட்ட படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.