காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
மலையாள திரைகளில் மிக பிரபலமான கதாசிரியரும், இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் பல நல்ல கதையம்சம் கொண்ட படங்களை கொடுத்திருக்கிறார். கேரளாவில் மதிப்பிற்குரிய மனிதராக கருதப்படும் இவர் கோட்டயம் மாவட்டத்தில் காஞ்சிரமட்டம் பகுதியில் உள்ள கே ஆர் நாராயணன் தேசிய காட்சி அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் சேர்மன் ஆகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்த கல்லூரியில் டைரக்டராக பொறுப்பு வகித்த சங்கர் மோகன் என்பவர் மாணவர்களிடம் சாதி பாகுபாடு காட்டுகிறார் என்பது உள்ளிட்ட பல காரணங்களை கூறி அவரை மாற்றக்கோரி கிட்டத்தட்ட 48 நாட்கள் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு சங்கர் மோகன் தனது பதவியை ராஜினாமா செய்து விலகினார்.
இந்த நிலையில் தற்போது தனது சேர்மன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து ராஜினாமா செய்துள்ளார் அடூர் கோபாலகிருஷ்ணன். இது பற்றி அவர் கூறும்போது, சங்கர் மோகன் இந்த கல்லூரிக்காகத்தான் தனது உழைப்பை கொடுத்து வந்தார். ஆனால் அவருக்கு எதிராக இப்படி ஒரு போராட்டத்தை தூண்டி விட்டதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். ஒரு நல்ல மனிதரை இந்த கல்லூரியை விட்டு தானாகவே வெளியேறும்படி ஒரு சூழலை உருவாக்கி விட்டார்கள். இதைத்தொடர்ந்து நானும் இந்த சேர்மன் பதவியில் இருந்து விலகுகிறேன். இது குறித்து சில நாட்களாகவே கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பேசி வந்தேன். இப்போது திடமாக இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார் அடூர் கோபாலகிருஷ்ணன்.