பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பஹத் பாசில் தற்போது முதல்முறையாக கன்னட திரை உலகில் நுழைந்து தூமம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக நடிக்கும் அபர்ணா பாலமுரளியும் முதன் முறையாக கன்னட திரை உலகில் நுழைந்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் பவன்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக விவியன் ராதாகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் டாக்குமெண்ட்ரி பட இயக்குனரும் கூட. தற்போது இவர் மீது கர்நாடகாவை சேர்ந்த மாடல் ஒருவரும் மாடல் ஒருங்கிணைப்பாளரும் என இரண்டு பெண்கள் மீ டூ புகார் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
இதுகுறித்து அந்த மாடல் அழகி சோசியல் மீடியா பக்கம் மூலமாக வெளியிட்டுள்ள பதிவில், டாக்குமென்ட்ரி படப்பிடிப்பு சமயத்தில் விவியன் ராதாகிருஷ்ணன் தனது உடலில் தொடக்கூடாத பகுதிகளை தொட்டதாகவும் மேலும் அவரது உடலை தனது உடல் மேல் படச்செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று அந்த மாடல் ஒருங்கிணைப்பாளர் கூறும்போது விவியன் ராதாகிருஷ்ணனுடன் பணியாற்றிய நாட்களில் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல தொல்லைகளுக்கு ஆளானதாக குறிப்பிட்டுள்ளார்.