மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! | கர்நாடகாவில் மற்றுமொரு சாதனை படைத்த 'காந்தாரா சாப்டர் 1' | தனுஷ் 54வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்து அப்டேட் ! | சாதியை எதிர்த்துதான் நான் படம் எடுக்கிறேன்! சொல்கிறார் மாரி செல்வராஜ் | சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை போட்ட நீதிமன்றம்! | தகுதிக்கு உரிய சம்பளம் கேட்க தயங்குவதில்லை! - சொல்லுகிறார் பிரியாமணி | பிளாஷ்பேக்: தபால்காரர் தேர்வு செய்த தரமான பாடலுடன் வெளிவந்த “தங்கை” திரைப்படம் |

பஹத் பாசில் தற்போது முதல்முறையாக கன்னட திரை உலகில் நுழைந்து தூமம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக நடிக்கும் அபர்ணா பாலமுரளியும் முதன் முறையாக கன்னட திரை உலகில் நுழைந்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் பவன்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக விவியன் ராதாகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் டாக்குமெண்ட்ரி பட இயக்குனரும் கூட. தற்போது இவர் மீது கர்நாடகாவை சேர்ந்த மாடல் ஒருவரும் மாடல் ஒருங்கிணைப்பாளரும் என இரண்டு பெண்கள் மீ டூ புகார் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
இதுகுறித்து அந்த மாடல் அழகி சோசியல் மீடியா பக்கம் மூலமாக வெளியிட்டுள்ள பதிவில், டாக்குமென்ட்ரி படப்பிடிப்பு சமயத்தில் விவியன் ராதாகிருஷ்ணன் தனது உடலில் தொடக்கூடாத பகுதிகளை தொட்டதாகவும் மேலும் அவரது உடலை தனது உடல் மேல் படச்செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று அந்த மாடல் ஒருங்கிணைப்பாளர் கூறும்போது விவியன் ராதாகிருஷ்ணனுடன் பணியாற்றிய நாட்களில் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல தொல்லைகளுக்கு ஆளானதாக குறிப்பிட்டுள்ளார்.