புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பெங்களூரு : மூத்த திரைப்பட நடிகர் லோஹிதாஸ்வா, மாரடைப்பால் பெங்களூரில் நேற்று காலமானார்.
கன்னட திரையுலகின் மூத்த நடிகர் லோஹிதாஸ்வா, 80. பெங்களூரில் வசித்து வந்த இவருக்கு, அக்டோபர் 10ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே குமாரசாமி லே அவுட்டில் உள்ள சாகர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
துமகூரு தொண்டகரேவை சேர்ந்த லோஹிதாஸ்வா, திரைப்பட நடிகர் மட்டுமின்றி, நுாற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்தவர். ஆங்கில பேராசிரியராகவும் பணியாற்றியவர். அபிமன்யூ, ஏ.கே.47, அவதார புருஷா, சின்னா, ஹொச நீரு, கஜேந்திரா, விஸ்வா, பிரதாப், போலீஸ் லாக்கப், ரெடிமேட் கண்டா, ஸ்நேகா லோகா, சுந்தரகாண்டா, சிம்ஹத மரி, மூரு ஜன்மா, டைம் பாம் உட்பட 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.
'டிவி' தொடர்களிலும் நடித்து, லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர். இவரது இறப்பிற்கு, முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
லோஹிதாஸ்வா உடல், குமாரசாமி லே அவுட்டில் உள்ள வீட்டில் இன்று காலை 7:30 மணி முதல் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்த வைக்கப்பட உள்ளது. பின், சொந்த கிராமத்தில் இறுதி சடங்கு நடத்தப்படுவதாக அவரது மகன் சரத் தெரிவித்தார்.