லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனை கமல் தொகுத்து வழங்குகிறார். இதேபோன்று தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். அங்கு 6வது சீசனாக பிக்பாஸ் தமிழுக்கு முன்பே துவங்கி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி சமூக சீர்கேட்டுக்கு காரணமாக இருக்கிறது. இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறது. இதனால் இந்த நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என்று ஐதராபாத் உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நாகார்ஜுனா, நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் மத்திய மாநில அரசுகள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இது சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.