துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் இவர் நடிப்போடு அரசியல் மற்றும் சமூக சேவைகளில் ஈடுபாடு கொண்டவர். தனது சமூக பணிகளில் ஒரு பகுதியாக கர்நாட மாநிலத்தில் உள்ள 31 மாவட்டங்களுக்கும் 31 ஆம்புலன்ஸ் வழங்கும் திட்டத்தை தொடங்கி உள்ளார்.
இந்த ஆம்புலன்ஸ்களுக்கு மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரை நினைவுகூறும் விதமாக அவரின் செல்லப்பெயரை கொண்டு அப்பு எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி மைசூரு மிஷன் மருத்துவமனையில் நடந்தது.
பிரகாஷ்ராஜ் பேசியதாவது: ‛‛நூற்றாண்டுக்கும் மேலாக ஏழைகளுக்காகச் சேவை செய்து வரும் மிஷன் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வழங்குவதை பெருமையாக கருதுகிறேன். கர்நாடக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை செயல்பட வேண்டும் என்பதே எனது கனவு. இதற்காக நிதி திரட்டவும் தயங்க மாட்டேன். இந்த வளாகத்தில் ரத்த வங்கி ஒன்று தொடங்கவும் திட்டம் வைத்திருக்கிறேன்'' என்றார்.