கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் |
நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் இவர் நடிப்போடு அரசியல் மற்றும் சமூக சேவைகளில் ஈடுபாடு கொண்டவர். தனது சமூக பணிகளில் ஒரு பகுதியாக கர்நாட மாநிலத்தில் உள்ள 31 மாவட்டங்களுக்கும் 31 ஆம்புலன்ஸ் வழங்கும் திட்டத்தை தொடங்கி உள்ளார்.
இந்த ஆம்புலன்ஸ்களுக்கு மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரை நினைவுகூறும் விதமாக அவரின் செல்லப்பெயரை கொண்டு அப்பு எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி மைசூரு மிஷன் மருத்துவமனையில் நடந்தது.
பிரகாஷ்ராஜ் பேசியதாவது: ‛‛நூற்றாண்டுக்கும் மேலாக ஏழைகளுக்காகச் சேவை செய்து வரும் மிஷன் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வழங்குவதை பெருமையாக கருதுகிறேன். கர்நாடக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை செயல்பட வேண்டும் என்பதே எனது கனவு. இதற்காக நிதி திரட்டவும் தயங்க மாட்டேன். இந்த வளாகத்தில் ரத்த வங்கி ஒன்று தொடங்கவும் திட்டம் வைத்திருக்கிறேன்'' என்றார்.