பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! |
1961ம் ஆண்டு வெளியான சீதாராம கல்யாணம் படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானவர் கடலி ஜெயசாரதி. தொடர்ந்து ஜகன் மோகினி, பக்த கண்ணப்பா, டிரைவர் ராமுடு, குடாச்சாரி நம்பர் 1 உட்பட சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆந்திர சினிமா தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன பொருளாளராகவும் இருந்தார்.
83 வயதான ஜெயசாரதி முதுமை காரணமாக சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த பல மாதங்களாகவே பல்வேறு உடல்நலப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.