கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
ஆண்ட்ராய்டு குஞ்சப்பன், மாஸ்டர் பீஸ், பிரேக்கிங் நியூஸ், அர்ச்சனா 31 நாட் அவுட், காயங்குளம் கொச்சுன்னி, நந்தனம் உட்பட 50க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்தவர் பாபுராஜ் வாழப்பள்ளி. நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார்.
59 வயதான இவர் தனது குடும்பத்துடன் கோழிகோட்டில் உள்ள குதுருசால் பகுதியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, ஓமச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். மாரடைப்பால் அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மறைந்த பாபுராஜ் வாழப்பள்ளிக்கு சந்தியா என்ற மனைவியும் பிஷால் என்ற மகனும் உள்ளனர். பாபுராஜ் வாழப்பள்ளி மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.