காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே. நாராயணா கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் சிரஞ்சீவியை 'அரசியல் புரோக்கர்' என்று விமர்சித்திருந்தார். இது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சிரஞ்சீவி ரசிகர் மன்றத்தினரும், தெலுங்கு திரையுலகமும் நாராயணாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தது. பல இடங்களில் சிரஞ்சீவி ரசிகர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில் தனது கருத்தை வாபஸ் பெற்றதோடு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் நாராயணா. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: அரசியல் தலைவர்கள் போட்டியாளர்களை விமர்சிப்பது சகஜம். எனது சமீபத்திய கருத்துக்களால் சிரஞ்சீவியின் ரசிகர்கள் மற்றும் கபு சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் புண்பட்டுள்ளனர் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. விமர்சனம் என்பது ஜனநாயகத்தின் ஒரு அங்கம். ஆனாலும் , நான் மொழியின் வரம்புகளைத் தாண்டியிருக்கக் கூடாது. இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்று அவர் தெரிவித்திருக்கிறார்.