சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே. நாராயணா கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் சிரஞ்சீவியை 'அரசியல் புரோக்கர்' என்று விமர்சித்திருந்தார். இது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சிரஞ்சீவி ரசிகர் மன்றத்தினரும், தெலுங்கு திரையுலகமும் நாராயணாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தது. பல இடங்களில் சிரஞ்சீவி ரசிகர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில் தனது கருத்தை வாபஸ் பெற்றதோடு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் நாராயணா. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: அரசியல் தலைவர்கள் போட்டியாளர்களை விமர்சிப்பது சகஜம். எனது சமீபத்திய கருத்துக்களால் சிரஞ்சீவியின் ரசிகர்கள் மற்றும் கபு சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் புண்பட்டுள்ளனர் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. விமர்சனம் என்பது ஜனநாயகத்தின் ஒரு அங்கம். ஆனாலும் , நான் மொழியின் வரம்புகளைத் தாண்டியிருக்கக் கூடாது. இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்று அவர் தெரிவித்திருக்கிறார்.




