காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
மலையாளத்தில் திரிஷ்யம் 2, டுவல்த் மேன் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப். இதையடுத்து தற்போது மலையாள சினிமாவின் இளம் நடிகரான ஆசிப் அலி என்பவரை வைத்து கூமன் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.. இதை முடித்த கையுடன் அடுத்ததாக ஏற்கனவே மோகன்லாலை வைத்து இயக்கிய, கொரோனா தாக்கம் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ள ராம் படத்தின் படப்பிடிப்பை தொடங்குகிறார் ஜீத்து ஜோசப்.
இந்த நிலையில் பிரித்விராஜ் நடிக்கும் படமொன்றை ஜீத்து ஜோசப் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மலையாள இயக்குனர் சங்கமான பெப்கா. ஆம்... மலையாள இயக்குனர் சங்கத்திற்கு நிதி திரட்டும் விதமாக இந்த படம் உருவாக இருக்கிறது.
த்ரிஷ்யம் படம் இயக்குவதற்கு முன்னதாகவே பிரித்விராஜ் நடித்த மெமரீஸ் என்கிற சூப்பர் ஹிட் கிரைம் த்ரில்லர் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். தற்போது வெளியாகி வரும் த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் படங்களுக்கு ஒரு வழிகாட்டி என்று கூட மெமரிஸ் படத்தை சொல்லலாம்.
அதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன் ஊழம் என்கிற படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றினாலும் அந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில் தான் இவர்கள் மூன்றாவது முறையாக இயக்குனர் சங்கத்திற்காக கூட்டணி சேர்ந்துள்ளனர்..