சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட்' படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக இந்தப்படத்தில் நடிப்பதன் மூலம் முதன்முதலாக தமிழ் திரையுலகில் நுழைந்துள்ளார் மலையாள வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ.. அதேசமயம் தீவிரவாதிகள் கூட்டத்தில் ஒருவராக வெறும் ஐந்து நிமிடங்கள் வந்துபோகும் அளவுக்கு மட்டுமே அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் எதுவும் இல்லாமல் உருவாக்கப்பட்டு இருந்தது மலையாள ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பெரிய நடிகர் படம் என்றாலும் இதுபோன்ற முக்கியத்துவம் இல்லாத சின்ன வேடங்களில் இனி நடிக்க வேண்டாம் என்பது போன்று ரசிகர்கள் பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்.
மலையாளத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஷைன் டாம் சாக்கோ, ஆரம்பத்தில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார்.. பின்னர் இதிகாசா என்கிற வெற்றிப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர், இன்னும் சில படங்களில் கூட கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்ல. சமீபத்தில் வெளியான பீஷ்ம பர்வம் படத்தில் கூட மம்முட்டிக்கு சமமான முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படிப்பட்ட நடிகரை தமிழுக்கு அழைத்து வந்து முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அவரை வீணடித்து விட்டார்களே என்பது தான் மலையாள ரசிகர்களின் ஆதங்கமாக வெளிப்பட்டுள்ளது...




