விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா |
பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'கூடே' என்கிற படத்தில் நஸ்ரியாவின் காதலராக நடித்தவர் ரோஷன் மேத்யூ. நிவின்பாலியுடன் இவர் இணைந்து நடித்த 'மூத்தோன்' படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்து அதிரவைத்தார். அந்தப்படத்தை பார்த்துவிட்டு பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்,. தான் இந்தியில் இயக்கிய 'சோக்ட்' என்கிற படத்திலும் இவருக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்தார். சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் ப்ரித்விராஜ் நடிப்பில் வெளியான குருதி என்கிற படத்திலும் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருந்தார் ரோஷன் மேத்யூ..
இது ஒரு பக்கமிருக்க தமிழில் அஜய் ஞானமுத்து டைரக்சனில் விக்ரம் நடித்துவரும் படம் 'கோப்ரா' படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில், ரோஷன் மேத்யூ நடித்துள்ளார். முதலில் இந்த கேரக்டரில் மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் என்பவர் தான் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் அவர் மலையாளத்தில் தயாரிப்பாளர் ஒருவருடன் மோதல் போக்கை கடைபிடித்து, ரெட்கார்டு போடும் அளவுக்கு பிரச்சனை பெரிதானதால், அவரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ரோஷன் மேத்யூ. ஒப்பந்தம் ஆனார்.
தற்போது படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் ரோஷன் மேத்யூவின் நடிப்பு குறித்து சிலாகித்து பதிவிட்டுள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. “ரோஷன் மேத்யூ.. உங்களைப் போன்ற வரமாக கிடைத்த நடிகருடன் பணி புரிந்தது இனிமையான அனுபவம்.. நிஜமாகவே நீங்கள் அற்புதமான மனிதர். உங்களுடைய காட்சிகளை திரையில் பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் அஜய் ஞானமுத்து