நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

இந்தியாவிலேயே ஓடிடியில் அதிக படங்கள் வெளிவருவது கேரளாவில் தான். வாரத்திற்கு ஒன்றிரண்டு படங்கள் ஓடிடியில் வெளியாகிறது. ஓடிடி வெளியீட்டுக்கென்றே படங்களும் தயாராகிறது. மலையாளிகள் உலகம் முழுக்க இருப்பதால் ஓடிடி வியாபாரம் கேரளாவில் அதிகமாக இருக்கிறது.
சிறிய படம் என்று இல்லாமல் பெரிய படங்களும் ஓடிடியில் வெளிவதற்கு கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 2 மற்றும் சமீபத்தில் வெளியான புரோ டாடி படங்கள் ஓடிடியில் வெளியானதால் தியேட்டர்கள் வருமானத்தை இழந்தன. காரணம் மோகன்லால் படங்களுக்கு என்று ஒரு மினிமம் வசூல் இருக்கிறது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கமும், தியேட்டர் அதிபர்கள் சங்கமும் மோதிக் கொண்டிருந்தன. இறுதியில் தியேட்டர்கள் முழுமையாக திறக்கப்படும்போது பெரிய படங்கள் முதலில் தியேட்டரிலும் பிறகு ஓடிடி தளத்திலும் வெளியிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் மோகன்லால் நடித்து முடித்துள்ள ஆராட்டு படம் வருகிற 18ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.