இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
வரும் ஜன-7ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக மும்பை மற்றும் தென்னிந்தியா முழுவதும் சுற்றி வருகின்றனர் படக்குழுவினர்.. அப்படி செல்லும் இடங்களில் அந்தந்த திரையுலகில் உள்ள முக்கிய ஹீரோக்களை புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கின்றனர். அந்தவகையில் பாலிவுட்டில் சல்மான்கான், கோலிவுட்டில் சிவகார்த்திகேயன் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தினர்.. சிவகார்த்திகேயனை பொறுத்தவரை இது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றே சொல்லவேண்டும்.
அந்தவகையில் கேரளாவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் இளம் முன்னணி நடிகரான டொவினோ தாமஸை சிறப்பு விருந்தினராக அழைத்து மேடையேற்றியது ஆர்ஆர்ஆர் டீம்.. மேலும் சமீபத்தில் டொவினோ நடிப்பில் வெளியான மின்னல் முரளி படத்தையும் ராஜமவுலி உள்ளிட்ட அனைவரும் புகழ்ந்து பேசியுள்ளனர்.
இதில் ஜூனியர் என்.டி.ஆர் ஒரு படி மேலே போய், “மோகன்லால், மம்முட்டி, துல்கர், பஹத் பாசில் போன்ற நடிகர்களை போலவே நீங்களும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு நடிகர் தான். உங்களுடைய மின்னல் முரளிக்கு என் வாழ்த்துக்கள்.. நாம் விரைவில் மீண்டும் சந்திப்போம் பிரதர்” என்று டொவினோவை பாராட்டியுள்ளார். வளர்ந்துவரும் நிலையில் உள்ள டொவினோ தாமஸுக்கும் இந்தியாவே வியந்து பார்க்கும் ஆர்ஆர்ஆர் படக்குழுவின் இந்த பாராட்டுக்கள் மிகப்பெரிய கவுரவம் என்றே சொல்ல வேண்டும்.