சகலகலா வல்லவன் ‛ஹேப்பி நியூர்' பாடலை படமாக்கிய ஒளிப்பதிவாளர் பாபு காலமானார் | டிச., 25ல் சிறை ரிலீஸ் : உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட விக்ரம் பிரபு படம் | இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் |
மலையாள திரையுலகில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்காட்டு வித்தியாசமான படங்களை எடுத்து பெயர் பெற்றவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. தற்போது மம்முட்டியை வைத்து நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் சுருளி என்கிற படம் ஒடிடியில் வெளியானது. ஜோசப் புகழ் நடிகர் ஜோஜு ஜார்ஜ் இந்தப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். ஒடிடியில் வெளியான இந்தப்படம் சென்சார் செய்யப்படாமலேயே வெளியானது.
படத்தில் அதிகப்படியான இடங்களில் ஆபாச வார்த்தைகள் பேசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இது படம் வெளியானபோதே சர்ச்சையை கிளப்பியது. இந்தநிலையில் இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், “இந்தப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் ரொம்பவே மோசமானது” என்று கூறி இதுகுறித்து படத்தின் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி, நடிகர் ஜோஜு ஜார்ஜ் மற்றும் சென்சார் போர்டு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தப்படம் எங்களால் தணிக்கை செய்யப்படவில்லை என சென்சார் போர்டு ஏற்கனவே கூறியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.