39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு |
மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற த்ரிஷ்யம்-2 படத்தை அதே பெயரில் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் ரீமேக் செய்து எடுத்தனர். முதல் பாகத்தில் இடம்பெற்ற அதே நட்சத்திர கூட்டணியை வைத்து, இந்த முறை இயக்குனர் ஜீத்து ஜோசப்பே தெலுங்கிலும் இயக்கினார். மலையாளத்தை போலவே தெலுங்கிலும் இந்தப்படத்தை ஓடிடியில் வெளியிடலாம் என்கிற முடிவோடு தான் எடுத்து முடித்தார்கள். ஆனால் அதேசமயம் அசுரன் ரீமேக்காக வெங்கடேஷ் நடித்த நரப்பா படத்தை முதலில் வெளியிட முடிவு செய்ததால் த்ரிஷ்யம்-2 ரிலீஸை தள்ளி வைத்தனர்.
அதேபோல ராணா, சாய்பல்லவி நடிப்பில் உருவான விராட பர்வம் படம், அது தயாரான சமயத்திலேயே தியேட்டர் ரிலீஸ் தான் என்கிற முடிவிலேயே எடுக்கப்பட்டது. இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவித்தும் கொரோனா தாக்கம் காரணமாக அது தள்ளிப்போனது.
இந்த இரண்டு படங்களையும் சுதீர் வர்மா என்கிற தயாரிப்பாளர் தான் தயாரித்துள்ளார். இந்தநிலையில் தற்போது த்ரிஷ்யம்-2 படத்தை தியேட்டர்களில் வெளியிட ஆர்வம் காட்டி அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளாராம் சுதீர் வர்மா. அதேசமயம் விராட பர்வம் படத்தை ஓடிடியில் வெளியிடலாம் என்கிற முடிவுக்கும் வந்துள்ளாராம். தயாரிப்பாளர் இப்படி உல்டாவாக முடிவெடுத்துள்ளதால் வெங்கடேஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்க, ராணாவின் ரசிகர்களாக காற்றுப்போன பலூன் போல ஆகிவிட்டார்களாம்.