மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனுக்கு தென்னிந்திய ரசிகர்களிடமும் மிகப்பெரிய அளவில் ஈர்ப்பு இருக்கிறது. அந்தவகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு பாடலுக்கு மட்டும் சன்னி லியோனை ஆடவைத்து ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்தார்கள். தற்போது மலையாள சினிமாவில் இன்னும் ஒருபடி மேலே போய் சன்னி லியோனின் முழு நடிப்புத் திறமையையும் வெளிக்கொண்டு வரும் விதமாக அவரை கதாநாயகியாக்கி அழகு பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். அந்த வகையில் ஏற்கனவே ரங்கீலா என்கிற படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வந்த சன்னி லியோன் அது பாதியில் நிற்கும் நிலையில், தற்போது ஷீரோ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அவர் சில சண்டைக் காட்சிகளிலும் நடிக்க வேண்டி இருந்தது. சன்னி லியோனை ஒப்பந்தம் செய்யும்போதே இயக்குனரை தனியாக அழைத்த அவரது மேனேஜர், சண்டைக்காட்சிகளில் சன்னி லியோன் நடிக்க ஆர்வம் காட்டுவார், ஆனால் நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.. நீங்கள் அதற்காக டூப் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்று கூறினாராம். ஆனால் இதை தெரிந்து கொண்ட சன்னி லியோன், தானே ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பேன் என்று கூறியதோடு அதற்காக முன்கூட்டியே கேரளா வந்து ஒரு வாரம் ரிகர்சல் செய்து பயிற்சி எடுத்துக் கொண்டாராம். அதுமட்டுமல்ல சண்டைக் காட்சிகளில் மிகச்சிறப்பாக நடித்தும் அசத்தினாராம்