தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
ஹிந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடிகர் டைகர் ஷெராப், திஷா பதானி. இருவரும் காதலர்கள் என்கிறது பாலிவுட் வட்டாரம். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜுன் 15ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியில் வரலாம். 2 மணிக்கு மேல் எந்தக் காரணமும் இல்லாமல் வெளியில் வரக் கூடாது.
ஆனால், காதல் ஜோடிகளான டைகர், திஷா இருவரும் மும்பையில் 2 மணிக்கு மேல் ஊர் சுற்றியிருக்கிறார்கள். போலீசார் அவர்களிடம் விசாரித்த போது சரியான காரணத்தைக் கூறவில்லையாம். அதனால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து எப்ஐஆர் போட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு விவேகம் படத்தில் வில்லனாக நடித்த ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய் மாஸ்க் போடாமல் வெளியில் வந்த போது அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.