இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
ஹிந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடிகர் டைகர் ஷெராப், திஷா பதானி. இருவரும் காதலர்கள் என்கிறது பாலிவுட் வட்டாரம். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜுன் 15ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியில் வரலாம். 2 மணிக்கு மேல் எந்தக் காரணமும் இல்லாமல் வெளியில் வரக் கூடாது.
ஆனால், காதல் ஜோடிகளான டைகர், திஷா இருவரும் மும்பையில் 2 மணிக்கு மேல் ஊர் சுற்றியிருக்கிறார்கள். போலீசார் அவர்களிடம் விசாரித்த போது சரியான காரணத்தைக் கூறவில்லையாம். அதனால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து எப்ஐஆர் போட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு விவேகம் படத்தில் வில்லனாக நடித்த ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய் மாஸ்க் போடாமல் வெளியில் வந்த போது அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.