வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
தென்னிந்திய சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை ராஷ்மிகா. 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. கூர்க்கை சேர்ந்த இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார். கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கில் பிரபலமானார். டியர் காமிரேட் டப்பிங் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இப்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 65வது படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சமீபத்தில் இவர் நடித்த கன்னட படமான பொகரு தமிழில் செமதிமிரு என்ற பெயரில் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் மிஷன் மஜ்னு என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இதில் அவர் சித்தார்த் மல்கோத்ரா ஜோடியாக நடிக்கிறார் . இது இந்திய ராணுவத்தில் நடந்த ஒரு நிகழ்வை மையமாக கொண்ட படம். இதில் நடிக்க ராஷ்மிகாவுக்கு படத்தின் இயக்குனர் சாந்தனு பகாச்சி பயிற்சி அளித்து வருகிறார். இந்த பயிற்சி கடந்த 2 மாதங்களாக நடந்து வருகிறது. தற்போது புஷ்பா, ஆடாலு மீக்கு ஜோஹரு படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா. இதன் இடைவெளியில் அடிக்கடி மும்பை சென்று நடிப்பு பயிற்சி பெற்று வருகிறார்.