சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. தனது மனைவியின் பிரசவத்திற்காக ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திலிருந்து பாதியிலேயே நாடு திரும்பினார் விராட் கோலி.
குழந்தை பிறந்த பின் அதற்கான அறிவிப்பை மட்டும் வெளியிட்ட தம்பதியினர் அதன்பின் எந்த அப்டேட்டுகளையும் கொடுக்கவில்லை. சமீபத்தில் குழந்தையின் பெயர் சூட்டு விழாவை கொண்டாடியிருப்பார்கள் போலிருக்கிறது. அலங்கரிக்கப்பட்ட வீட்டில் தங்கள் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து குழந்தையின் பெயர் 'வாமிகா' என அறிவித்துள்ளார்கள்.
“காதல், நன்றி ஆகியவற்றுடன் நாங்கள் வாழ்க்கையை ஒன்றாக வாழ்ந்தோம். ஆனால், இந்த குட்டி வாமிகா மொத்தமாக வேறு ஒரு தளத்திற்கு எங்களை கொண்டு சென்றுவிட்டாள். கண்ணீர், சிரிப்பு, கவலை, பேரின்பம், சில நிமிடங்களில், சில நேரங்களில் அனுபவித்த உணர்வுகள்... தூக்கம் குறைவாக உள்ளது, ஆனால், எங்கள் இதயங்கள் நிரம்பியுள்ளன. உங்கள் அனைவரின் வாழ்த்துகள், பிரார்த்தனைகள், நல்ல ஆற்றல் ஆகியவற்றிற்கு நன்றி,” என அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
“எனது மொத்த உலகமும் ஒரே பிரேமில் உள்ளது” என விராட் கோலி அதற்குக் கமெண்ட் போட்டுள்ளார்.