காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
ஜான்சி ராணி லக்சுமிபாய் வரலாற்று படமான மணிகர்னிகாவில் நடித்தார் கங்கனா. தற்போது அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவியில் ஜெயலலிதாவாக நடித்துள்ளார். அடுத்து முன்னாள் பிரதமர் இந்திராவின் வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
இதுகுறித்து கங்கனா தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: நான் இந்திராவாக நடிக்கப் போகிறேன். இதற்காக ஸ்கிரிப்ட் அமைக்கும் பணி இறுதிகட்டத்தில் இருக்கிறது. இது அவரின் முழுமையான வரலாற்று படம் அல்ல. அவரது வாழ்க்கையின் சில முக்கியமான காலகட்டங்கள், அரசியல் நிகழ்வுகள் பற்றிய படம். இந்திராவின் அரசியல் நிலைப்பாடுகள், செயல்பாடுகளை இளைய தலைமுறைக்கு சொல்லும் விதமாக இந்தப் படம் இருக்கும். பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள், படம் ஒரு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. என்று எழுதியிருக்கிறார்.
அவசரநிலை பிரகடனம், பொற்கோவில் தாக்குதல், இந்திரா படுகொலை ஆகியவை பற்றிய படம் என்று கூறப்படுகிறது. கங்கனா நடிக்கும் ரிவால்வார் ராணி படத்தை இயக்கும் சாய் கபீர் இயக்குவார் என்று தெரிகிறது.