பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
ஜான்சி ராணி லக்சுமிபாய் வரலாற்று படமான மணிகர்னிகாவில் நடித்தார் கங்கனா. தற்போது அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவியில் ஜெயலலிதாவாக நடித்துள்ளார். அடுத்து முன்னாள் பிரதமர் இந்திராவின் வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
இதுகுறித்து கங்கனா தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: நான் இந்திராவாக நடிக்கப் போகிறேன். இதற்காக ஸ்கிரிப்ட் அமைக்கும் பணி இறுதிகட்டத்தில் இருக்கிறது. இது அவரின் முழுமையான வரலாற்று படம் அல்ல. அவரது வாழ்க்கையின் சில முக்கியமான காலகட்டங்கள், அரசியல் நிகழ்வுகள் பற்றிய படம். இந்திராவின் அரசியல் நிலைப்பாடுகள், செயல்பாடுகளை இளைய தலைமுறைக்கு சொல்லும் விதமாக இந்தப் படம் இருக்கும். பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள், படம் ஒரு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. என்று எழுதியிருக்கிறார்.
அவசரநிலை பிரகடனம், பொற்கோவில் தாக்குதல், இந்திரா படுகொலை ஆகியவை பற்றிய படம் என்று கூறப்படுகிறது. கங்கனா நடிக்கும் ரிவால்வார் ராணி படத்தை இயக்கும் சாய் கபீர் இயக்குவார் என்று தெரிகிறது.