மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஜான்சி ராணி லக்சுமிபாய் வரலாற்று படமான மணிகர்னிகாவில் நடித்தார் கங்கனா. தற்போது அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவியில் ஜெயலலிதாவாக நடித்துள்ளார். அடுத்து முன்னாள் பிரதமர் இந்திராவின் வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
இதுகுறித்து கங்கனா தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: நான் இந்திராவாக நடிக்கப் போகிறேன். இதற்காக ஸ்கிரிப்ட் அமைக்கும் பணி இறுதிகட்டத்தில் இருக்கிறது. இது அவரின் முழுமையான வரலாற்று படம் அல்ல. அவரது வாழ்க்கையின் சில முக்கியமான காலகட்டங்கள், அரசியல் நிகழ்வுகள் பற்றிய படம். இந்திராவின் அரசியல் நிலைப்பாடுகள், செயல்பாடுகளை இளைய தலைமுறைக்கு சொல்லும் விதமாக இந்தப் படம் இருக்கும். பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள், படம் ஒரு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. என்று எழுதியிருக்கிறார்.
அவசரநிலை பிரகடனம், பொற்கோவில் தாக்குதல், இந்திரா படுகொலை ஆகியவை பற்றிய படம் என்று கூறப்படுகிறது. கங்கனா நடிக்கும் ரிவால்வார் ராணி படத்தை இயக்கும் சாய் கபீர் இயக்குவார் என்று தெரிகிறது.