ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் |
நட்சத்திர திருமணங்கள் இந்தியாவில் வேறு எந்த திரையுலகையும் விட பாலிவுட்டில் தான் அதிகம் நடைபெறுகின்றன. அந்த வகையில் கடந்த வருடம் பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இவர்கள் திருமணம் செய்து கொண்டதால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் பல நாட்கள் அழுதேன் என்று கூறியுள்ளார் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் மகளான சான்வி.
இது குறித்து அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “கரண் ஜோஹர் இயக்கத்தில் வெளியான 'ஸ்டூடன்ட் ஆப் தி இயர்' என்கிற படத்தில் இருந்து நான் சித்தார்த் மல்ஹோத்ராவின் தீவிர ரசிகையாக இருந்தேன். என்னை அறியாமலேயே அவர் மீது ஒரு கிரஷ் ஏற்பட்டது. தொடர்ந்து எனது சோசியல் மீடியா பக்கத்தில் அவருடைய புகைப்படங்களாக பகிர்ந்து கொண்டு வந்தேன் ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட 700 புகைப்படங்களை நான் பகிர்ந்திருந்தேன்.
ஆனால் அவரது திருமணத்திற்கு பிறகு அனைத்து புகைப்படங்களையும் நான் நீக்கி விட்டேன். ஏனென்றால் ஒருவேளை சித்தார்த் அப்போது என்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் இடம்பெற்றுள்ள அவருடைய இந்த புகைப்படங்களை பார்க்கும் போது அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார் என்பதாலேயே அவற்றை நீக்கி விட்டேன்” என்று கூறியுள்ளார் சான்வி. அது மட்டுமல்ல சித்தார்த்தின் திருமண வீடியோவை பார்த்தபோது ஒரு சோகப்படம் பார்ப்பது போலவே உணர்ந்தேன் என்றும் அவர் கூறியுள்ளார்.