சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
நட்சத்திர திருமணங்கள் இந்தியாவில் வேறு எந்த திரையுலகையும் விட பாலிவுட்டில் தான் அதிகம் நடைபெறுகின்றன. அந்த வகையில் கடந்த வருடம் பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இவர்கள் திருமணம் செய்து கொண்டதால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் பல நாட்கள் அழுதேன் என்று கூறியுள்ளார் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் மகளான சான்வி.
இது குறித்து அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “கரண் ஜோஹர் இயக்கத்தில் வெளியான 'ஸ்டூடன்ட் ஆப் தி இயர்' என்கிற படத்தில் இருந்து நான் சித்தார்த் மல்ஹோத்ராவின் தீவிர ரசிகையாக இருந்தேன். என்னை அறியாமலேயே அவர் மீது ஒரு கிரஷ் ஏற்பட்டது. தொடர்ந்து எனது சோசியல் மீடியா பக்கத்தில் அவருடைய புகைப்படங்களாக பகிர்ந்து கொண்டு வந்தேன் ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட 700 புகைப்படங்களை நான் பகிர்ந்திருந்தேன்.
ஆனால் அவரது திருமணத்திற்கு பிறகு அனைத்து புகைப்படங்களையும் நான் நீக்கி விட்டேன். ஏனென்றால் ஒருவேளை சித்தார்த் அப்போது என்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் இடம்பெற்றுள்ள அவருடைய இந்த புகைப்படங்களை பார்க்கும் போது அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார் என்பதாலேயே அவற்றை நீக்கி விட்டேன்” என்று கூறியுள்ளார் சான்வி. அது மட்டுமல்ல சித்தார்த்தின் திருமண வீடியோவை பார்த்தபோது ஒரு சோகப்படம் பார்ப்பது போலவே உணர்ந்தேன் என்றும் அவர் கூறியுள்ளார்.