நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? |
காதலித்து திருமணம் செய்து கொண்ட அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் நட்சத்திர தம்பதிக்கு ஆரத்யா என்ற மகள் இருக்கிறார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக சோசியல் மீடியாவில் ஒரு வதந்தி பரவி வந்தது. குறிப்பாக, ஆனந்த் அம்பானி திருமணத்தில் ஐஸ்வர்யாராயும், அபிஷேக் பட்சனும் தனித்தனியே கலந்து கொண்டதால் அந்த வதந்தி மேலும் காட்டுத்தீயாக பரவியது. ஆனபோதிலும் அதற்கு அவர்கள் தொடர்ந்து மறுத்து வந்தார்கள்.
இப்படியான நிலையில்தான் கடந்த ஐந்தாம் தேதி மும்பையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் ஜோடியாக கலந்து கொண்டுள்ளார்கள். அப்போது தங்களது குடும்பத்தாருடன் செல்பி எடுத்துள்ளார் ஐஸ்வர்யாராய். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி அவர்களின் விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.