பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
காதலித்து திருமணம் செய்து கொண்ட அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் நட்சத்திர தம்பதிக்கு ஆரத்யா என்ற மகள் இருக்கிறார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக சோசியல் மீடியாவில் ஒரு வதந்தி பரவி வந்தது. குறிப்பாக, ஆனந்த் அம்பானி திருமணத்தில் ஐஸ்வர்யாராயும், அபிஷேக் பட்சனும் தனித்தனியே கலந்து கொண்டதால் அந்த வதந்தி மேலும் காட்டுத்தீயாக பரவியது. ஆனபோதிலும் அதற்கு அவர்கள் தொடர்ந்து மறுத்து வந்தார்கள்.
இப்படியான நிலையில்தான் கடந்த ஐந்தாம் தேதி மும்பையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் ஜோடியாக கலந்து கொண்டுள்ளார்கள். அப்போது தங்களது குடும்பத்தாருடன் செல்பி எடுத்துள்ளார் ஐஸ்வர்யாராய். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி அவர்களின் விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.